ஞாயிறு, 29 நவம்பர், 2015

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்


🌿அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
🌿சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
🌿பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.
🌿கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
🌿மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
🌿குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
🌿அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.
🌿புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
🌿பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
🌿பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
🌿பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
🌿சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
🌿வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.
🌿முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
🌿வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.
🌿முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
🌿புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.
🌿புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
🌿நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.
🌿தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.
🌿முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.
🌿முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.
🌿பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
🌿புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
🌿மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
🌿மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
🌿முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
🌿சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.
🌿வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
🌿தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
🌿தவசிக்கீரை- இருமலை போக்கும்.
🌿சாணக்கீரை- காயம் ஆற்றும்.
🌿வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.
🌿விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.
🌿கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.
🌿துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.
🌿துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
🌿காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
🌿மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.
🌿நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.

(25 Nov) "  "      .      ?            .    , "    ?"     .      ..          .     .   .      . " . ?"  . "  ..,   . ?"    .   , "..    .       .       "     .    . "      .         .   ."  .      . , , " .    .     .?"  , "    .      . .       " . , . "      .     .    ."    .    .      . ,      .     . "  ?"    . ,    .   .     . "        .    " .        ""  . "  "    ..     .  ,  !

     . " . ?"  .

"  ..,   . ?"    .

  , "..    .       .       "     .    .

"      .         .   ."  .

     . , , " .    .     .?"  , "    .      . .       " .

, . "      .     .    ."    .

   .      . ,      .     . "  ?"    .

,    .   .     .

"        .    " .

       ""  .

"  "    ..     .  ,  !

புதன், 25 நவம்பர், 2015

நெல், பப்பாளி, காய்கறிகள், அழகுச் செடிகள்...

விருதுகளை குவிக்கும் வெற்றி விவசாயி!
“ரைது ரக்ஷன தேச ரக்ஷன ரைது ரக்ஷனே மன பிரத்துக்கு ரக்ஷன’ என்பது தெலுங்கின் புகழ்பெற்ற பழமொழி. இதன் பொருள், ‘விவசாயிகள் வளர்ந்தால் தேசம் வளரும்... விவசாயிகள் நன்றாக இருந்தால், உலகத்திலுள்ள உயிர்கள் எல்லாம் நன்றாக இருக்கும்’ என்பதுதான். ஆனால், ‘நம் நாட்டில் விவசாயிகளின் வாழ்வு வளமாக இருக்கிறதா?’ என்று கேட்டால் ‘இல்லை’ என்பதுதான் நிதர்சனம். நம் நாட்டைப் பொறுத்தவரை, ‘நாடு விவசாயிகளை உயர்த்தும்’ என்று எதிர்பார்ப்பதை விட விவசாயிகள் தம்மைத் தாமே உயர்த்திக் கொள்வதுதான் சிறந்த வழி. அதுவும் தெலங்கானா உள்ளிட்ட ‘விவசாயிகள் தற்கொலை’ அதிகம் நடந்து வரும் மாநிலங்களில் தற்சார்பு ஒன்றே சிறந்த வழி.
தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டில் மட்டும், 1,450 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வறட்சி, கடன் காரணமாக பல விவசாயிகள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இந்தியாவில் தற்கொலை நடக்கும் மாநிலங்களில், மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது, தெலங்கானா. கடந்த அக்டோபர் 10-ம் தேதி மாநிலம் முழுவதும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் பொது வேலைநிறுத்தம் செய்தன. அந்தளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட மாநில அரசிடத்தில், விவசாயத்துக்கு உயிரூட்டும் வழிகள் எதுவும் உருப்படியாக இல்லை.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமாக இருந்தபோதும் சரி,  இப்போது தெலங்கானா என பிரிந்துவிட்ட போதும் சரி... இதுதான் நிதர்சனம்!
இத்தகையச் சூழலிலும், ஆள்பவர்களிடமிருந்து எந்தச் சலுகையையும் எதிர்பார்க்காமல், கடந்த 26 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தின் மூலம், மாநிலத்தில் நேர்மையான முறையில் சம்பளத்தை மட்டும் வாங்கும் ஓர் அரசு உயரதிகாரியை விட, அதிகமாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார், ஒரு விவசாயி. ஆந்திரா முதல்வர் முதல் அமெரிக்க அதிபர் வரை அவரது விவசாய முறைகளைக் கேட்டு வியந்து பாராட்டியுள்ளனர். அத்தனை பெருமைக்கும் உரிய அந்த விவசாயி, ‘குடிவாலா நாகரத்தின நாயுடு’.
அண்மையில் ஈரோட்டில், பசுமை விகடன் நடத்திய ‘அக்ரி எக்ஸ்போ-2015’ல் கலந்து கொண்டு, தமிழ்நாட்டு விவசாயிகள் மனதிலும் இடம்பிடித்தார். இவர் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றி முடித்தவுடன், ‘‘இவரது பண்ணைக்குச் சென்று, பசுமை விகடனில் விரிவாக எழுதுங்கள்...’’ என வாசகர்கள் தரப்பில் அன்புக் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நாகரத்தினம் நாயுடுவைச் சந்திக்கப் புறப்பட்டோம்.... ஹைதராபாத்-விஜயவாடா சாலையில் 25 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது, ராமோஜிராவ் பிலிம்சிட்டி. அதன் நுழைவாயிலுக்கு எதிரே செல்லும் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் இருக்கிறது, நாயுடுவின் பண்ணை. பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தில் இருந்த இப்பகுதி தற்போது, தெலங்கானா மாநிலம், ரெங்காரெட்டி மாவட்டம், தரமதிபேட்டா கிராமத்துக்கு உட்பட்டதாக இருக்கிறது.
காலை வெயில் ஏறிக் கொண்டிருக்க... பச்சை பசேலென்ற நெற்கதிர்கள், தாள்கள் கூப்பி வரவேற்றன. கூஸ் வாத்துக்களின் ‘லபக்... லபக்’ சத்தத்துக்கு இடையே நாகரத்தின நாயுடுவைச் சந்திதோம். பண்ணையைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார், அவர்.
 “என்னுடைய பூர்விகம் சித்தூர் மாவட்டம், பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணாபுரம் கிராமம். டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் படிச்சுட்டு சென்னையில ரெண்டு வருஷம் வேலை செஞ்சிக்கிட்டு இருந்தேன். அப்போதிருந்தே நல்லா தமிழ் பேசத் தெரியும். பிறகு, ஹைதராபாத் வந்து நானும், என் மனைவியும் ஒரு கம்பெனியில வேலை செஞ்சிக்கிட்டு இருந்தோம். அந்த நேரத்துல (1989-ம் ஆண்டு) இந்த 12 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். வாங்கும்போது அது, வெறும் பொட்டல் காடு. கற்களும், சிறு குன்றுகளும் நிறைஞ்சிருந்தது.
 வேலையிலிருந்து விலகி முழு நேரமா விவசாயத்துல இறங்கினேன். நண்பர்கள், ‘வேண்டாம், ஆழம் தெரியாம காலை விடாதே’னு எச்சரிச்சாங்க. ‘வேலையில இருந்துக்கிட்டே விவசாயம் செய்யுங்க’னும் சொன்னாங்க. நான், ‘விவசாயம்தான்’னு ஒரே முடிவா இறங்கிட்டேன்” என்ற நாகரத்தின நாயுடு, “கொஞ்சம் பொறுங்க... பப்பாளித் தோட்டத்துல அறுவடைக்கு ஆட்களை வரச் சொல்லியிருந்தேன். வந்துட்டாங்களானு பாத்துட்டு வந்திடுறேன்” என்று தோட்டத்துக்குள் சென்றார். அவர் வரும் வரை பொக்கே தயாரிக்கப் பயன்படும் அழகுச்செடிகளைச் சுற்றிப் பார்த்தவாறு இருந்தோம்.
உழைப்பால் உருவான மாற்றம்!
சற்றுநேரத்தில் திரும்பி வந்த நாகரத்தின நாயுடு, “இந்த மண்ணு சரளை மண் வகையைச் சேர்ந்தது. அதனால இதுல பெரியளவுல வெள்ளாமை எடுக்க முடியாதுனு பலபேர் சொன்னாங்க. முதல்ல ஒரு ஏக்கர் நிலத்தை உழுது, கற்களைப் பெருக்கி, சமன் செஞ்சு பயிர் வெச்சேன். அதுல வந்த வருமானத்த வெச்சே, அடுத்து ஒவ்வொரு ஏக்கரா தயார் பண்ணினேன். இப்படியே 12 ஏக்கரையும் தயார் செய்துட்டேன். அப்போ நிலத்திலிருந்து கற்களை வெளியேத்துறதுக்கு ஒரு லோடுக்கு 50 ரூபாய் நான் கொடுத்தேன். இப்போ ஒரு லோடுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயை நிலத்துக்காரங்களுக்குக் கொடுத்து எடுத்துட்டுப் போறாங்க.
கரையேற்றிய கலப்புப் பயிர்!
அடிப்படையிலேயே பாரம்பர்ய விவசாய முறை குடும்பங்கிறதால ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி இல்லாமலேயே விவசாயத்தைத் தொடங்கினேன். ஆந்திரா, தெலங்கானாவைப் பொறுத்தவரை நெல், பருத்தி, மிளகாய்தான் முக்கியப் பயிர்கள். ஆரம்பத்துல நானும் நெல்தான் போட்டேன். ஆனா, நெல்லோட நின்றிருந்தா இந்தளவுக்கு வளர்ந்திருக்க முடியுமானு தெரியலை. கலப்புப் பயிர் செய்றதாலதான் இந்தளவுக்கு என்னால வளர முடிஞ்சது. அதிலும் ‘பொக்கே’வுக்குப் பயன்படுத்துற அழகு மலர்கள், காய்கறிகள், பழப்பயிர்கள்னு பல பயிர்களையும் கலந்து செய்ய ஆரம்பிச்சேன்.
தினமும் `7 ஆயிரம் வருமானம்!
இதுல அழகு மலர்கள் அதிகமான வருமானத்தைக் கொடுத்தது. ஹைதராபாத் மாநகர் பகுதியில தனியார் மருத்துவமனைகள், துணிக்கடைகள், நகைக்கடைகள்னு கொண்டு போய் அழகு மலர்களை வித்தேன். அங்க, வரவேற்பு அறைகள்ல அழகுக்காக அதிகம் பயன்படுத்துவாங்க. அதுபோக, ஏதாவது விசேஷங்கள், விருந்தினர்கள் வர்றப்போவும் அதிகமா அழகு மலர்களை வாங்குவாங்க. இதனால அதிகமா அழகு மலர்களை உற்பத்தி செய்தேன். ஒரு நாளைக்கு 7 ஆயிரம் ரூபாய் வரை மலர் விற்பனையில சம்பாதிச்சிக்கிட்டு இருந்தேன். நானும், எங்கம்மாவும் பண்ணை வேலைகளைப் பார்த்தோம். பிறகு மனைவியையும், வேலையை விட்டு விலகச் சொல்லி, விவசாயத்துல இறங்க வெச்சேன். அப்போதும், ‘அவங்களாவது வேலைக்குப் போகட்டுமே’னு நண்பர்கள்கிட்ட இருந்து கடும் எதிர்ப்பு. ஆனாலும் நான் முடிவை மாத்திக்கலை. நெல், அழகு மலர்களோடு, மா, தென்னைனு வளர்க்க ஆரம்பிச்சேன். இதோடு சோளம், நிலக்கடலை, துவரையை மானாவாரிப் பயிர்களா விளைவிக்க ஆரம்பிச்சேன்...
உள்ளூரில் உருவான சந்தை வாய்ப்பு!
ஆரம்பத்துல இயற்கை முறையில் விளைஞ்சதுனு சொல்லி பருப்புகளை விற்பனை செய்யும்போது, தனி மரியாதை கிடைச்சது. தெரிஞ்சவங்க, நண்பர்கள்னுதான் விற்பனையை ஆரம்பிச்சேன். எங்கிட்ட ஒரு பழக்கம், பண்ணையிலிருந்து வர்ற எந்தப் பொருளை வித்தாலும், நண்பர்களா இருந்தாலும் சரி, உறவினர்களா இருந்தாலும் சரி, கறாரா பணத்தை வசூல் செஞ்சிடுவேன். ஆனா, கொடுக்கிற காசுக்கு தகுந்த மாதிரி எந்தக்குறையும் இல்லாம தரமான பொருட்களைக் கொடுப்பேன். அதனால, பெரும்பாலும் யாரும் என்கிட்ட இலவசமா எதிர்பார்க்க மாட்டாங்க. இந்தப் பழக்கத்தால, நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்து வீடுகள்னு வீட்டைச் சுத்தியே ஒரு சந்தை உருவாக ஆரம்பிச்சிடுச்சு. இதனால, விற்பனை செய்றதுக்கு வேற எந்த சந்தையையும் தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லாமப் போயிடுச்சு” என்றவர், அறுவடை செய்து கொண்டு வந்த பப்பாளியில் இருந்து, சற்று பழுத்திருந்த ஒரு பழத்தை அறுத்து துண்டு போட்டுக் கொடுத்தார். அருமையான சுவையில் இருந்தது, இயற்கையில் விளைந்த அந்தப்பழம். அதை சுவைத்தவாறே நெல் சாகுபடி குறித்துப் பேச ஆரம்பித்தார், நாகரத்தின நாயுடு.
ஏக்கருக்கு 92 மூட்டை நெல்!
“ஆரம்பத்துல வழக்கமான முறையில நடவு பண்ணிதான் நெல் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருந்தேன்.
2000-ம் வருஷத்துக்குப் பிறகு மடகாஸ்கர்ல எஸ்.ஆர்.ஐ (ஒற்றை நாற்று நடவு) முறையில நெல் சாகுபடி செய்றதைப் பத்தி கேள்விப்பட்டேன். ஒரு வேளாண் விஞ்ஞானிகிட்ட பேசி அந்த சாகுபடி முறை பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். 2003-ம் வருஷத்துல இருந்து எஸ்.ஆர்.ஐ முறையில பயிர் செய்யத் தொடங்கினேன். 2004-05-ம் வருஷத்துல என்னோட நெல் வயல்ல ஒரு ஹெக்டேருக்கு 15.4 டன் (1 ஏக்கருக்கு 92 மூட்டை) நெல் மகசூல் எடுத்தேன். அதுவும் 60 சதவிகித தண்ணீர் பாசனத்தில் சாதிச்சேன். அந்த வருஷம் ‘மாநில அரசின் சிறந்த விவசாயி’ விருதை எனக்குக் கொடுத்தாங்க.
ஆந்திரா முதல் அமெரிக்கா வரை!
அதே வருஷம், அப்போ ஆந்திர மாநில முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகரரெட்டி ஹெலிகாப்டர்ல என் பண்ணைக்கு வந்தார். நெல் அறுவடைப் பணிகளைப் பார்த்துட்டு அன்னிக்கு முழுசும் பண்ணையிலேயே இருந்தார். ஒரு மாநில முதல்வர் விவசாயியின் பண்ணைக்கு வந்து ஒரு நாள் இருக்கிறதுங்கிறது எவ்வளவு பெரிய விஷயம்... அதை சாத்தியமாக்கினது என்னோட  இயற்கை விவசாயம்தான்.
அப்போ, ‘நீங்க விவசாயத்துல எவ்ளோ சம்பாதிக்கிறீங்க?’னு முதல்வர் என்கிட்ட கேட்டார். ‘ஒரு நேர்மையான அரசு உயர் அதிகாரி எவ்ளோ சம்பாதிக்கிறாரோ, அதற்கு இணையா சம்பாதிச்சிக்கிட்டு இருக்கிறேன்’னு சொன்னேன். ஏன்னா, அந்த நேரத்துல விவசாயத்துல நல்ல நிலைக்கு நான் வந்திருந்தேன். ‘முதல்வரே பண்ணைக்கு வந்தார்’ங்கிற விஷயம், மாநிலம் முழுக்க பரவிடுச்சு. அப்படியே பக்கத்து மாவட்டங்கள்லயும் பரவினதுல... ‘ஒரு விவசாயி’யா எனக்கு மிகப் பெரிய கௌரவம் கிடைச்சது. பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர். ரீட், என்னோட நெல் சாகுபடி முறையைக் கேள்விப்பட்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ.புஷ்கிட்ட சொல்லியிருக்கார். அவர் 2006-ம் ஆண்டு இந்தியா வந்தப்போ என்னை அழைச்சு எஸ்.ஆர்.ஐ முறை பத்தி விசாரிச்சு கைகுலுக்கிப் பாராட்டினார்.
330 சர்வதேச, தேசிய, மாநில விருதுகள்!
பங்களாதேஷ் நாட்டிலிருந்து வந்த 17 பேர் குழு என்னோட வயலைப் பார்த்துட்டு விருது கொடுத்தாங்க. இதுவரைக்கும் சர்வதேச, தேசிய, மாநில அளவுல 330 விருதுகளை வாங்கியிருக்கேன். இப்பவும் பள்ளிக்குழந்தைகள், விவசாயிகள்...னு எல்லோருக்கும் இயற்கை விவசாயத்தைப் பத்தியும் எஸ்.ஆர்.ஐ.தொழில்நுட்பம் பத்தியும் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன். வேறெந்தத் துறையில இருந்திருந்தாலும், இந்த அங்கீகாரம் எனக்கு கண்டிப்பாக கிடைச்சிருக்காது” என்று நெகிழ்ந்த நாகரத்தின நாயுடு, உணவு உண்ண அழைத்துச் சென்றார்.
உணவுக்குப்பிறகு, தனது மற்ற பயிர்கள் பற்றியும், தனது விவசாய முறைகள் குறித்தும் நாகரத்தின நாயுடு விரிவாகச் சொன்ன விஷயங்கள்,

திங்கள், 16 நவம்பர், 2015

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.

🌾”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.

🌾பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.

🌾கடவுள் உடனே,
“ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.

🌾விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

🌾அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

🌾”மழையே பெய்” என்றான்.

🌾பெய்தது.

🌾நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.

🌾ஈரமான நிலத்தை உழுதான்.

🌾தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான்.

🌾மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.

🌾பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.

🌾வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.

🌾அறுவடைக் காலமும் வந்தது.

🌾விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.

🌾அதிர்ந்தான்.

🌾உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.

🌾அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.

🌾”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.

🌾“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.

🌾கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.

🌾மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.

🌾போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.

🌾எல்லாமே வசதியாக
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.

🌾தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.

🌾வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.

🌾பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.

🌾இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

🌾பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.

🌾பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?

🌾எதிர்பாராத திருப்பங்கள்தானே  நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்.

நீதிக்கதை"

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.

அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."

அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.

அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது.

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?