ஞாயிறு, 29 நவம்பர், 2015

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்


🌿அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
🌿சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
🌿பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.
🌿கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
🌿மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
🌿குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
🌿அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.
🌿புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
🌿பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
🌿பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
🌿பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
🌿சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
🌿வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.
🌿முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
🌿வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.
🌿முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
🌿புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.
🌿புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
🌿நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.
🌿தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.
🌿முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.
🌿முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.
🌿பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
🌿புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
🌿மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
🌿மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
🌿முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
🌿சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.
🌿வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
🌿தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
🌿தவசிக்கீரை- இருமலை போக்கும்.
🌿சாணக்கீரை- காயம் ஆற்றும்.
🌿வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.
🌿விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.
🌿கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.
🌿துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.
🌿துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
🌿காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
🌿மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.
🌿நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.

(25 Nov) "  "      .      ?            .    , "    ?"     .      ..          .     .   .      . " . ?"  . "  ..,   . ?"    .   , "..    .       .       "     .    . "      .         .   ."  .      . , , " .    .     .?"  , "    .      . .       " . , . "      .     .    ."    .    .      . ,      .     . "  ?"    . ,    .   .     . "        .    " .        ""  . "  "    ..     .  ,  !

     . " . ?"  .

"  ..,   . ?"    .

  , "..    .       .       "     .    .

"      .         .   ."  .

     . , , " .    .     .?"  , "    .      . .       " .

, . "      .     .    ."    .

   .      . ,      .     . "  ?"    .

,    .   .     .

"        .    " .

       ""  .

"  "    ..     .  ,  !

புதன், 25 நவம்பர், 2015

நெல், பப்பாளி, காய்கறிகள், அழகுச் செடிகள்...

விருதுகளை குவிக்கும் வெற்றி விவசாயி!
“ரைது ரக்ஷன தேச ரக்ஷன ரைது ரக்ஷனே மன பிரத்துக்கு ரக்ஷன’ என்பது தெலுங்கின் புகழ்பெற்ற பழமொழி. இதன் பொருள், ‘விவசாயிகள் வளர்ந்தால் தேசம் வளரும்... விவசாயிகள் நன்றாக இருந்தால், உலகத்திலுள்ள உயிர்கள் எல்லாம் நன்றாக இருக்கும்’ என்பதுதான். ஆனால், ‘நம் நாட்டில் விவசாயிகளின் வாழ்வு வளமாக இருக்கிறதா?’ என்று கேட்டால் ‘இல்லை’ என்பதுதான் நிதர்சனம். நம் நாட்டைப் பொறுத்தவரை, ‘நாடு விவசாயிகளை உயர்த்தும்’ என்று எதிர்பார்ப்பதை விட விவசாயிகள் தம்மைத் தாமே உயர்த்திக் கொள்வதுதான் சிறந்த வழி. அதுவும் தெலங்கானா உள்ளிட்ட ‘விவசாயிகள் தற்கொலை’ அதிகம் நடந்து வரும் மாநிலங்களில் தற்சார்பு ஒன்றே சிறந்த வழி.
தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டில் மட்டும், 1,450 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வறட்சி, கடன் காரணமாக பல விவசாயிகள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இந்தியாவில் தற்கொலை நடக்கும் மாநிலங்களில், மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது, தெலங்கானா. கடந்த அக்டோபர் 10-ம் தேதி மாநிலம் முழுவதும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் பொது வேலைநிறுத்தம் செய்தன. அந்தளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட மாநில அரசிடத்தில், விவசாயத்துக்கு உயிரூட்டும் வழிகள் எதுவும் உருப்படியாக இல்லை.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமாக இருந்தபோதும் சரி,  இப்போது தெலங்கானா என பிரிந்துவிட்ட போதும் சரி... இதுதான் நிதர்சனம்!
இத்தகையச் சூழலிலும், ஆள்பவர்களிடமிருந்து எந்தச் சலுகையையும் எதிர்பார்க்காமல், கடந்த 26 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தின் மூலம், மாநிலத்தில் நேர்மையான முறையில் சம்பளத்தை மட்டும் வாங்கும் ஓர் அரசு உயரதிகாரியை விட, அதிகமாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார், ஒரு விவசாயி. ஆந்திரா முதல்வர் முதல் அமெரிக்க அதிபர் வரை அவரது விவசாய முறைகளைக் கேட்டு வியந்து பாராட்டியுள்ளனர். அத்தனை பெருமைக்கும் உரிய அந்த விவசாயி, ‘குடிவாலா நாகரத்தின நாயுடு’.
அண்மையில் ஈரோட்டில், பசுமை விகடன் நடத்திய ‘அக்ரி எக்ஸ்போ-2015’ல் கலந்து கொண்டு, தமிழ்நாட்டு விவசாயிகள் மனதிலும் இடம்பிடித்தார். இவர் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றி முடித்தவுடன், ‘‘இவரது பண்ணைக்குச் சென்று, பசுமை விகடனில் விரிவாக எழுதுங்கள்...’’ என வாசகர்கள் தரப்பில் அன்புக் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நாகரத்தினம் நாயுடுவைச் சந்திக்கப் புறப்பட்டோம்.... ஹைதராபாத்-விஜயவாடா சாலையில் 25 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது, ராமோஜிராவ் பிலிம்சிட்டி. அதன் நுழைவாயிலுக்கு எதிரே செல்லும் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் இருக்கிறது, நாயுடுவின் பண்ணை. பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தில் இருந்த இப்பகுதி தற்போது, தெலங்கானா மாநிலம், ரெங்காரெட்டி மாவட்டம், தரமதிபேட்டா கிராமத்துக்கு உட்பட்டதாக இருக்கிறது.
காலை வெயில் ஏறிக் கொண்டிருக்க... பச்சை பசேலென்ற நெற்கதிர்கள், தாள்கள் கூப்பி வரவேற்றன. கூஸ் வாத்துக்களின் ‘லபக்... லபக்’ சத்தத்துக்கு இடையே நாகரத்தின நாயுடுவைச் சந்திதோம். பண்ணையைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார், அவர்.
 “என்னுடைய பூர்விகம் சித்தூர் மாவட்டம், பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணாபுரம் கிராமம். டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் படிச்சுட்டு சென்னையில ரெண்டு வருஷம் வேலை செஞ்சிக்கிட்டு இருந்தேன். அப்போதிருந்தே நல்லா தமிழ் பேசத் தெரியும். பிறகு, ஹைதராபாத் வந்து நானும், என் மனைவியும் ஒரு கம்பெனியில வேலை செஞ்சிக்கிட்டு இருந்தோம். அந்த நேரத்துல (1989-ம் ஆண்டு) இந்த 12 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். வாங்கும்போது அது, வெறும் பொட்டல் காடு. கற்களும், சிறு குன்றுகளும் நிறைஞ்சிருந்தது.
 வேலையிலிருந்து விலகி முழு நேரமா விவசாயத்துல இறங்கினேன். நண்பர்கள், ‘வேண்டாம், ஆழம் தெரியாம காலை விடாதே’னு எச்சரிச்சாங்க. ‘வேலையில இருந்துக்கிட்டே விவசாயம் செய்யுங்க’னும் சொன்னாங்க. நான், ‘விவசாயம்தான்’னு ஒரே முடிவா இறங்கிட்டேன்” என்ற நாகரத்தின நாயுடு, “கொஞ்சம் பொறுங்க... பப்பாளித் தோட்டத்துல அறுவடைக்கு ஆட்களை வரச் சொல்லியிருந்தேன். வந்துட்டாங்களானு பாத்துட்டு வந்திடுறேன்” என்று தோட்டத்துக்குள் சென்றார். அவர் வரும் வரை பொக்கே தயாரிக்கப் பயன்படும் அழகுச்செடிகளைச் சுற்றிப் பார்த்தவாறு இருந்தோம்.
உழைப்பால் உருவான மாற்றம்!
சற்றுநேரத்தில் திரும்பி வந்த நாகரத்தின நாயுடு, “இந்த மண்ணு சரளை மண் வகையைச் சேர்ந்தது. அதனால இதுல பெரியளவுல வெள்ளாமை எடுக்க முடியாதுனு பலபேர் சொன்னாங்க. முதல்ல ஒரு ஏக்கர் நிலத்தை உழுது, கற்களைப் பெருக்கி, சமன் செஞ்சு பயிர் வெச்சேன். அதுல வந்த வருமானத்த வெச்சே, அடுத்து ஒவ்வொரு ஏக்கரா தயார் பண்ணினேன். இப்படியே 12 ஏக்கரையும் தயார் செய்துட்டேன். அப்போ நிலத்திலிருந்து கற்களை வெளியேத்துறதுக்கு ஒரு லோடுக்கு 50 ரூபாய் நான் கொடுத்தேன். இப்போ ஒரு லோடுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயை நிலத்துக்காரங்களுக்குக் கொடுத்து எடுத்துட்டுப் போறாங்க.
கரையேற்றிய கலப்புப் பயிர்!
அடிப்படையிலேயே பாரம்பர்ய விவசாய முறை குடும்பங்கிறதால ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி இல்லாமலேயே விவசாயத்தைத் தொடங்கினேன். ஆந்திரா, தெலங்கானாவைப் பொறுத்தவரை நெல், பருத்தி, மிளகாய்தான் முக்கியப் பயிர்கள். ஆரம்பத்துல நானும் நெல்தான் போட்டேன். ஆனா, நெல்லோட நின்றிருந்தா இந்தளவுக்கு வளர்ந்திருக்க முடியுமானு தெரியலை. கலப்புப் பயிர் செய்றதாலதான் இந்தளவுக்கு என்னால வளர முடிஞ்சது. அதிலும் ‘பொக்கே’வுக்குப் பயன்படுத்துற அழகு மலர்கள், காய்கறிகள், பழப்பயிர்கள்னு பல பயிர்களையும் கலந்து செய்ய ஆரம்பிச்சேன்.
தினமும் `7 ஆயிரம் வருமானம்!
இதுல அழகு மலர்கள் அதிகமான வருமானத்தைக் கொடுத்தது. ஹைதராபாத் மாநகர் பகுதியில தனியார் மருத்துவமனைகள், துணிக்கடைகள், நகைக்கடைகள்னு கொண்டு போய் அழகு மலர்களை வித்தேன். அங்க, வரவேற்பு அறைகள்ல அழகுக்காக அதிகம் பயன்படுத்துவாங்க. அதுபோக, ஏதாவது விசேஷங்கள், விருந்தினர்கள் வர்றப்போவும் அதிகமா அழகு மலர்களை வாங்குவாங்க. இதனால அதிகமா அழகு மலர்களை உற்பத்தி செய்தேன். ஒரு நாளைக்கு 7 ஆயிரம் ரூபாய் வரை மலர் விற்பனையில சம்பாதிச்சிக்கிட்டு இருந்தேன். நானும், எங்கம்மாவும் பண்ணை வேலைகளைப் பார்த்தோம். பிறகு மனைவியையும், வேலையை விட்டு விலகச் சொல்லி, விவசாயத்துல இறங்க வெச்சேன். அப்போதும், ‘அவங்களாவது வேலைக்குப் போகட்டுமே’னு நண்பர்கள்கிட்ட இருந்து கடும் எதிர்ப்பு. ஆனாலும் நான் முடிவை மாத்திக்கலை. நெல், அழகு மலர்களோடு, மா, தென்னைனு வளர்க்க ஆரம்பிச்சேன். இதோடு சோளம், நிலக்கடலை, துவரையை மானாவாரிப் பயிர்களா விளைவிக்க ஆரம்பிச்சேன்...
உள்ளூரில் உருவான சந்தை வாய்ப்பு!
ஆரம்பத்துல இயற்கை முறையில் விளைஞ்சதுனு சொல்லி பருப்புகளை விற்பனை செய்யும்போது, தனி மரியாதை கிடைச்சது. தெரிஞ்சவங்க, நண்பர்கள்னுதான் விற்பனையை ஆரம்பிச்சேன். எங்கிட்ட ஒரு பழக்கம், பண்ணையிலிருந்து வர்ற எந்தப் பொருளை வித்தாலும், நண்பர்களா இருந்தாலும் சரி, உறவினர்களா இருந்தாலும் சரி, கறாரா பணத்தை வசூல் செஞ்சிடுவேன். ஆனா, கொடுக்கிற காசுக்கு தகுந்த மாதிரி எந்தக்குறையும் இல்லாம தரமான பொருட்களைக் கொடுப்பேன். அதனால, பெரும்பாலும் யாரும் என்கிட்ட இலவசமா எதிர்பார்க்க மாட்டாங்க. இந்தப் பழக்கத்தால, நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்து வீடுகள்னு வீட்டைச் சுத்தியே ஒரு சந்தை உருவாக ஆரம்பிச்சிடுச்சு. இதனால, விற்பனை செய்றதுக்கு வேற எந்த சந்தையையும் தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லாமப் போயிடுச்சு” என்றவர், அறுவடை செய்து கொண்டு வந்த பப்பாளியில் இருந்து, சற்று பழுத்திருந்த ஒரு பழத்தை அறுத்து துண்டு போட்டுக் கொடுத்தார். அருமையான சுவையில் இருந்தது, இயற்கையில் விளைந்த அந்தப்பழம். அதை சுவைத்தவாறே நெல் சாகுபடி குறித்துப் பேச ஆரம்பித்தார், நாகரத்தின நாயுடு.
ஏக்கருக்கு 92 மூட்டை நெல்!
“ஆரம்பத்துல வழக்கமான முறையில நடவு பண்ணிதான் நெல் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருந்தேன்.
2000-ம் வருஷத்துக்குப் பிறகு மடகாஸ்கர்ல எஸ்.ஆர்.ஐ (ஒற்றை நாற்று நடவு) முறையில நெல் சாகுபடி செய்றதைப் பத்தி கேள்விப்பட்டேன். ஒரு வேளாண் விஞ்ஞானிகிட்ட பேசி அந்த சாகுபடி முறை பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். 2003-ம் வருஷத்துல இருந்து எஸ்.ஆர்.ஐ முறையில பயிர் செய்யத் தொடங்கினேன். 2004-05-ம் வருஷத்துல என்னோட நெல் வயல்ல ஒரு ஹெக்டேருக்கு 15.4 டன் (1 ஏக்கருக்கு 92 மூட்டை) நெல் மகசூல் எடுத்தேன். அதுவும் 60 சதவிகித தண்ணீர் பாசனத்தில் சாதிச்சேன். அந்த வருஷம் ‘மாநில அரசின் சிறந்த விவசாயி’ விருதை எனக்குக் கொடுத்தாங்க.
ஆந்திரா முதல் அமெரிக்கா வரை!
அதே வருஷம், அப்போ ஆந்திர மாநில முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகரரெட்டி ஹெலிகாப்டர்ல என் பண்ணைக்கு வந்தார். நெல் அறுவடைப் பணிகளைப் பார்த்துட்டு அன்னிக்கு முழுசும் பண்ணையிலேயே இருந்தார். ஒரு மாநில முதல்வர் விவசாயியின் பண்ணைக்கு வந்து ஒரு நாள் இருக்கிறதுங்கிறது எவ்வளவு பெரிய விஷயம்... அதை சாத்தியமாக்கினது என்னோட  இயற்கை விவசாயம்தான்.
அப்போ, ‘நீங்க விவசாயத்துல எவ்ளோ சம்பாதிக்கிறீங்க?’னு முதல்வர் என்கிட்ட கேட்டார். ‘ஒரு நேர்மையான அரசு உயர் அதிகாரி எவ்ளோ சம்பாதிக்கிறாரோ, அதற்கு இணையா சம்பாதிச்சிக்கிட்டு இருக்கிறேன்’னு சொன்னேன். ஏன்னா, அந்த நேரத்துல விவசாயத்துல நல்ல நிலைக்கு நான் வந்திருந்தேன். ‘முதல்வரே பண்ணைக்கு வந்தார்’ங்கிற விஷயம், மாநிலம் முழுக்க பரவிடுச்சு. அப்படியே பக்கத்து மாவட்டங்கள்லயும் பரவினதுல... ‘ஒரு விவசாயி’யா எனக்கு மிகப் பெரிய கௌரவம் கிடைச்சது. பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர். ரீட், என்னோட நெல் சாகுபடி முறையைக் கேள்விப்பட்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ.புஷ்கிட்ட சொல்லியிருக்கார். அவர் 2006-ம் ஆண்டு இந்தியா வந்தப்போ என்னை அழைச்சு எஸ்.ஆர்.ஐ முறை பத்தி விசாரிச்சு கைகுலுக்கிப் பாராட்டினார்.
330 சர்வதேச, தேசிய, மாநில விருதுகள்!
பங்களாதேஷ் நாட்டிலிருந்து வந்த 17 பேர் குழு என்னோட வயலைப் பார்த்துட்டு விருது கொடுத்தாங்க. இதுவரைக்கும் சர்வதேச, தேசிய, மாநில அளவுல 330 விருதுகளை வாங்கியிருக்கேன். இப்பவும் பள்ளிக்குழந்தைகள், விவசாயிகள்...னு எல்லோருக்கும் இயற்கை விவசாயத்தைப் பத்தியும் எஸ்.ஆர்.ஐ.தொழில்நுட்பம் பத்தியும் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன். வேறெந்தத் துறையில இருந்திருந்தாலும், இந்த அங்கீகாரம் எனக்கு கண்டிப்பாக கிடைச்சிருக்காது” என்று நெகிழ்ந்த நாகரத்தின நாயுடு, உணவு உண்ண அழைத்துச் சென்றார்.
உணவுக்குப்பிறகு, தனது மற்ற பயிர்கள் பற்றியும், தனது விவசாய முறைகள் குறித்தும் நாகரத்தின நாயுடு விரிவாகச் சொன்ன விஷயங்கள்,

திங்கள், 16 நவம்பர், 2015

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.

🌾”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.

🌾பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.

🌾கடவுள் உடனே,
“ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.

🌾விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

🌾அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

🌾”மழையே பெய்” என்றான்.

🌾பெய்தது.

🌾நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.

🌾ஈரமான நிலத்தை உழுதான்.

🌾தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான்.

🌾மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.

🌾பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.

🌾வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.

🌾அறுவடைக் காலமும் வந்தது.

🌾விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.

🌾அதிர்ந்தான்.

🌾உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.

🌾அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.

🌾”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.

🌾“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.

🌾கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.

🌾மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.

🌾போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.

🌾எல்லாமே வசதியாக
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.

🌾தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.

🌾வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.

🌾பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.

🌾இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

🌾பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.

🌾பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?

🌾எதிர்பாராத திருப்பங்கள்தானே  நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்.

நீதிக்கதை"

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.

அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."

அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.

அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது.

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

திங்கள், 12 அக்டோபர், 2015

பேரீச்சை வளர்ப்பு அதிக லாபம் தரும்!

பாலைவனத்தில் விளையக்கூடிய பயிரான பேரீச்சையை நமது மண்ணிலும் விளைவிக்கலாம். உரிய முறையில் பேரிச்சையை சாகுபடி செய்து மார்க்கெட்டிங் செய்தால் லாபத்தில் அசத்தலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையத்தை சேர்ந்த கே.ஜி.டேட்ஸ் உரிமையாளர் முருகவேல். அவர் கூறியதாவது: ஆரம்பத்தில் ரெடிமேடு ஆடை தயாரிப்பு தொழில் செய்தேன். அதில் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. வேறு சில தொழில்களிலும் ஈடுபட்டு அதிலும் நஷ்டம் ஏற்பட்டு பணம் எல்லாம் இழந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடியை சேர்ந்த அன்பழகன் என்ற விவசாயி புதிய ரக திசு பேரீச்சையை வளர்த்து லாபம் சம்பாதிப்பது பற்றி தெரிய வந்தது. அங்கு சென்று விவரங்களை கேட்டேன். 
நிச்சயம் இதில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என நம்பிக்கை துளிர்த்தது. கையில் காசில்லாத நிலையில், இடத்தை விற்று பேரீச்சை சாகுபடியில் ஈடுபட்டேன். இது புது வகையான திசு வளர்ப்பு பேரீச்சை. இந்தியாவில் இந்த கன்று உற்பத்தி கிடையாது. இங்கிலாந்தில் மட்டும் ஆய்வுக்கூடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த திசு கன்றுகள் வளைகுடா நாடுகளில் பராமரிக்கப்பட்டு, பின் இந்தியா கொண்டு வரப்படுகிறது. குஜராத் வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து கன்றுகளை பெற்றேன். 
முருகம்பாளையத்தில் 2.5 ஏக்கரில் 200 திசு வளர்ப்பு பேரீச்சை கன்றுகளை, 2009ம் ஆண்டு பிப்ரவரியில் நடவு செய்தேன். பாலைவனத்தில் விளையும் சாதாரண பேரீச்சைக்கு தண்ணீர் தேவையில்லை. ஆனால் திசு பேரீச்சைக்கு தண்ணீர் தேவை. சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்ச வேண்டும். மூன்று ஆண்டுகளில் காய்க்க தொடங்கி விடும். முறையான பராமரிப்பு காரணமாக எங்கள் தோட்டத்தில் 28 மாதங்களிலேயே காய்க்க துவங்கியது. பராமரிப்பு மட்டும் சரியாக இருந்தால் ஒரு ஏக்கரில், மூன்றாம் ஆண்டில் இருந்து நல்ல வருவாய் கிடைக்கும். 
ரூ.8 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருஷம்தோறும் வருமானம் பார்க்க முடியும். ஆரம்ப கட்ட முதலீட்டை முதல் அறுவடையிலேயே பெற்றுவிடலாம். பிறகு, பராமரிப்பு மட்டும் செய்தால் போதும். வேறு எந்த விவசாயத்திலும் இதுபோன்று லாபம் பார்க்க முடியாது. பேரீச்சையை பொருத்தவரை, டேனின் என்ற வேதிப்பொருள் அதிகம் இருப்பதால் அதை அப்படியே உட்கொள்ள முடிவதில்லை. எனவே பதப்படுத்தப்பட்ட பழங்களே சந்தைக்கு வருகின்றன. இதற்கு முற்றிலும் மாறாக, திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்படும் பர்ரி வகை பேரீச்சைகளை அப்படியே சாப்பிடலாம். 
இவை இரும்பு சத்து மிக்கவை. சிறிய விவசாயிகள் இதை பயிரிட்டு அதிக லாபம் பார்க்கலாம். விவசாயம் தெரியாத இளைஞர்கள்கூட முறைப்படி கற்றுக்கொண்டால், இது சிறந்த தொழில். கோவை மண்டலத்தில் முதலாவதாகவும், தென்னிந்தியாவில் இரண்டாவதாகவும் எங்களது திசு வளர்ப்பு பேரீச்சை பண்ணை உள்ளது. திருப்பூர் கலெக்டர் எங்கள் பண்ணைக்கு வந்து பார்வையிட்டு பாராட்டினார். 
முதலீடு 

ஒரு பேரீச்சை கன்றின் விலை ரூ.3,500. ஒரு ஏக்கரில் 70 கன்றுகளுக்கான செலவு ரூ.2 லட்சத்து 45 ஆயிரம். சொட்டு நீர் பாசன குழாய்களுக்கான செலவு ரூ.30 ஆயிரம். ஆரம்ப கட்ட முதலீடு இவைதான். ஆண்டுக்கொருமுறை இயற்கை உரத்துக்கு ஆகும் செலவு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம். தினசரி தண்ணீர் விட்டு, வண்டுகளை விரட்டவும், கனிகளை பறித்து பேக்கிங் செய்யவும் அதிகபட்சம் 2 பேர் போதும். கைக்கு எட்டும் தூரத்தில் பழங்கள் இருப்பதால், பறிக்க நிறைய பேர் தேவையில்லை. இவர்களுக்கு கூலி வருடத்துக்கு ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. 
லாபம்! 

பயிர் செய்த மூன்றாவது வருடத்தில் இருந்து காய்க்க துவங்கும். ஜூலை முதல் ஆகஸ்ட் வரை சீசன். ஒரு மரத்துக்கு 5 முதல் 7 குலைகள் வரை தள்ளும். ஒரு குலையில் 10 கிலோ வரை பழங்கள் கிடைக்கும். சராசரியாக ஒரு மரத்துக்கு 60 கிலோ கிடைத்தாலும், ஏக்கருக்கு 4200 கிலோ கிடைக்கும். கிலோ 300 ரூபாய்க்கு விற்றால், ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் கிடைக்கும். உரம், பராமரிப்பு, கூலியாட்கள் செலவு, பேக்கிங் செலவு போக வருடத்துக்கு சுமார் 10 லட்ச ரூபாய் லாபம் பார்க்கலாம். தென்னை மரத்தை விட அதிகமாக 75 வருடங்களுக்கு மேல் விளைச்சல் இருக்கும். ஆண்டுகள் ஆக ஆக பழங்களின் எடையும் அதிகரிக்கும். ஆர்டரின்பேரில் குஜராத்தில் இருந்து நாற்றுகளை வாங்கி கொடுத்து கமிஷன் பெற்றும் வருமானம் ஈட்டலாம். 
சந்தை வாய்ப்பு! 

உலக பேரீச்சை உற்பத்தியில் 36 சதவீதம் இந்திய சந்தையில்தான் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் உள்நாட்டு உற்பத்தி இன்னும் ஒரு சதவீத அளவைக்கூட எட்டவில்லை. இதனால் பேரீச்சைக்கு சந்தை வாய்ப்பு இங்கு பிரகாசமாக இருக்கிறது. பழங்களை உள்ளூர் வியாபாரிகளும், நகரங்களில் உள்ள மொத்த வியாபாரிகளும் வாங்கி செல்கின்றனர். ஒருமுறை இதன் சுவை அறிந்தவர்கள் தேடி வந்து வாங்குவார்கள். கால், அரை, ஒரு கிலோ பாக்கெட்களாக விற்கலாம். குறிப்பாக வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் இதை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் ஏற்றுமதி வாய்ப்பும் அதிகம். 
பயிரிடும் முறை! 

ஒரு ஏக்கரில் சுமார் 70 கன்றுகளை நடலாம். ஒரு கன்றுக்கும் மற்றொன்றுக்கும் குறைந்தது 8 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். சுமார் 30 டிகிரி செல்சியஸ் வெப் பம் போதுமானது. சொட்டுநீர் பாசன முறையில் ஆரம்பத்தில் தினசரி ஒரு மரத்துக்கு 50 லிட்டர் தண்ணீர் விடவேண்டும். படிப்படியாக இதை அதிகரித்து, நன்கு வளர்ந்த மரத்துக்கு தினசரி 300 லிட்டர் தண்ணீர் விடவேண்டும். மரத்தின் அடியில் தண்ணீர் தேங்காமல், வடிகால் அமைக்க வேண்டும். 
மருந்து கூடாது! 

வண்டுகளால் மரத்துக்கு பாதிப்பு ஏற்படலாம். இதை தடுக்க எவ்வித மருந்தும் தெளிக்க கூடாது. மரத்தில் இருந்து பழங்களை பறித்து அப்படியே சாப்பிடலாம் என்பதால் மருந்து தெளிக்க கூடாது. தோட்டத்துக்கு 2 ஆட்களை நியமித்து, கண்காணிக்க வேண்டும். ஆரம்பத்தில் ஓரிரு வண்டுகள்தான் வரும். இதை அப்போதே கண்டுபிடித்து கொன்று விடுவது முக்கியம். இல்லையென்றால் வண்டுகள் தொல்லை அதிகரித்து விடும். இயற்கை உரமே இட வேண்டும். பேரீச்சை பழுத்ததும் வவ்வால், பறவைகளால் சேதம் ஏற்படாமல் இருக்க குலையை சுற்றி பாலிதீன் கவர்களால் மூட வேண்டும். 
பர்ரியின் சிறப்புகள்! 

பிஞ்சு முதல் பழம் வரை 6 நிலைகளாக பர்ரி பேரீச்சை பிரிக்கப்படுகிறது. 19 முதல் 23 வார மஞ்சள் நிற பழம் 3வது நிலை. இது கலால் எனப்படுகிறது. இதை மரத்தில் இருந்து பறித்தவுடன் அப்படியே சாப்பிடலாம். பர்ரி என்றால், அரபு மொழியில் பெரியது என்று அர்த்தம். பெரிய காய்களுடன் கூடிய பேரீச்சை என்பதால், இப்படி அழைக்கப்படுகிறது. இதன் தாயகம் ஈராக். ஜோர்டான் நாட்டில் இந்த பர்ரி ரக பேரீச்சையை கோல்டன் டேட்ஸ் என்று அழைக்கிறார்கள். அறுவடை செய்யப்பட்ட பழங்களை 3 மாதம் வரை இருப்பு வைக்கலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். பேரிட்சை வளர்ப்பு விபரங்கள் இந்த இணைப்பில் உள்ள கட்டுரை பேரிட்சை வளர்ப்பு குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யும்,. டேட்ஸ்-பேரிச்சை, விற்பனை வாய்ப்பு அதிகமுள்ள பர்ரி ரக பேரிச்சை, அவிநாசி அருகே 3 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரக பேரிச்சை மரங்களை தோட்டக்கலைத் துறை மூலம் மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் நடவு செய்ய திருப்பூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இப் பேரிச்சை பழங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. வளைகுடா நாடுகளிலும், இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகளவில் பேரிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. அப் பகுதிகளில் உலர்ந்த பேரிச்சை பழங்களே உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக பர்ரி என்ற புதிய பேரிச்சை ரகங்கள் திருப்பூர் மாவட்டத்தில் நடவு செய்யப்பட்டுள்ளன. அவிநாசி தாலுகா வஞ்சிபாளையத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ள இப் பேரிச்சை மரங்கள் மூலம், ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை வருமானம் பெற முடியும் என்கிறார் அதன் உரிமையாளர் முருகவேல். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு திசு வளர்ப்பு முறையில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த ரக பேரிச்சை மரங்களை அதிகளவில் நோய் தாக்குவதில்லை. சரியான இடைவெளியுடன் ஒரு ஏக்கரில் சுமார் 70 மரங்கள் நடவு செய்ய முடியும். நடவு செய்த 3 ஆண்டுகளில் அறுவடைக்குத் தயாராகும் இப் பேரிச்சை மரங்கள் மூலம் முதலாண்டில் 25 முதல் 30 கிலோ வரையிலும், அடுத்து வரும் ஆண்டுகளில் 30 முதல் 200 கிலோ வரையிலும் விளைச்சல் கிடைக்கும். புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் என மனித உடலுக்குத் தேவையான சத்துகள் நிறைந்துள்ள இப் பேரிச்சைப் பழ மரங்களுக்கு தென்னையை விட அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. இருப்பினும், நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் இந்த ரக பேரிச்சைப் பழங்களால் அதிக லாபம் பெற முடியும் என்றார். திருப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், ஆட்சியர் சி.சமயமூர்த்தியிடம் இப் பேரிச்சை பழங்களின் சிறப்புகள் குறித்து அவர் விளக்கினார். மேலும், தோட்டக்கலைத் துறை மூலம் இந்த ரக பேரிச்சை மரங்களை மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் நடவு செய்யவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முருகவேல் வலியுறுத்தினர். வஞ்சிபாளையத்தில் பர்ரி ரக பேரிச்சை மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ள பகுதியை தோட்டக்கலைத் துறை சார்பில் ஆய்வு செய்து, மாவட்டத்தின் பிறபகுதி விவசாய நிலங்களிலும் இப் பேரிச்சைகளை நடவு செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார் ஆட்சியர். பட்டையைக் கிளப்பும் பர்ரி பேரீச்சை இந்த இணைப்பில் உள்ள கட்டுரை பேரிட்சை வளர்ப்பு குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யும்,. டேட்ஸ்-பேரிச்சை, விற்பனை வாய்ப்பு அதிகமுள்ள பர்ரி ரக பேரிச்சை, அவிநாசி அருகே 3 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரக பேரிச்சை மரங்களை தோட்டக்கலைத் துறை மூலம் மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் நடவு செய்ய திருப்பூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இப் பேரிச்சை பழங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. வளைகுடா நாடுகளிலும், இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகளவில் பேரிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. அப் பகுதிகளில் உலர்ந்த பேரிச்சை பழங்களே உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக பர்ரி என்ற புதிய பேரிச்சை ரகங்கள் திருப்பூர் மாவட்டத்தில் நடவு செய்யப்பட்டுள்ளன. அவிநாசி தாலுகா வஞ்சிபாளையத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ள இப் பேரிச்சை மரங்கள் மூலம், ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை வருமானம் பெற முடியும் என்கிறார் அதன் உரிமையாளர் முருகவேல். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு திசு வளர்ப்பு முறையில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த ரக பேரிச்சை மரங்களை அதிகளவில் நோய் தாக்குவதில்லை. சரியான இடைவெளியுடன் ஒரு ஏக்கரில் சுமார் 70 மரங்கள் நடவு செய்ய முடியும். நடவு செய்த 3 ஆண்டுகளில் அறுவடைக்குத் தயாராகும் இப் பேரிச்சை மரங்கள் மூலம் முதலாண்டில் 25 முதல் 30 கிலோ வரையிலும், அடுத்து வரும் ஆண்டுகளில் 30 முதல் 200 கிலோ வரையிலும் விளைச்சல் கிடைக்கும். புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் என மனித உடலுக்குத் தேவையான சத்துகள் நிறைந்துள்ள இப் பேரிச்சைப் பழ மரங்களுக்கு தென்னையை விட அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. இருப்பினும், நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் இந்த ரக பேரிச்சைப் பழங்களால் அதிக லாபம் பெற முடியும் என்றார். திருப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், ஆட்சியர் சி.சமயமூர்த்தியிடம் இப் பேரிச்சை பழங்களின் சிறப்புகள் குறித்து அவர் விளக்கினார். மேலும், தோட்டக்கலைத் துறை மூலம் இந்த ரக பேரிச்சை மரங்களை மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் நடவு செய்யவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முருகவேல் வலியுறுத்தினர். வஞ்சிபாளையத்தில் பர்ரி ரக பேரிச்சை மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ள பகுதியை தோட்டக்கலைத் துறை சார்பில் ஆய்வு செய்து, மாவட்டத்தின் பிறபகுதி விவசாய நிலங்களிலும் இப் பேரிச்சைகளை நடவு செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார் ஆட்சியர். பட்டையைக் கிளப்பும் பர்ரி பேரீச்சை

பெருத்த லாபம் தரும் பெரு நெல்லி + சப்போட்டா கூட்டணி


நாகர்கோவிலில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேல தெரிசனங்கோப்பு.தென்னை, பெருநெல்லி என தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்கிறார் மணியன்.“கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த காலகட்டத்திலேலே அப்பாவோட சேர்ந்து விவசாயத்தையும் பார்த்து கொண்டுதான் இருந்தேன். அந்த நேரத்தில் எங்களுக்கு முழுக்க நெல் விவசாயம்தான.கட்டுபடியான விலையில்லை, வேலையாட்கள் பற்றாக்குறைனு ஏகப்பட்ட பிரச்சனை.அதனால் கொஞ்சம் இடத்தில் தென்னை, வாழையை சாகுபடி செய்தோம்.எங்கள் பகுதியில் அதிகமாக காற்று வீசுகிற பகுதி. அதனால் வாழை மரங்கள் சரிந்து பெருந்தொல்லையாக இருந்தது.அந்த சமயத்தில்தான் தற்செயலாக பெருநெல்லி தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டேன். அதுதொடர்பானத்தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொண்டு வந்த நான்,உடனடியா சாகுபடியிலும் இறங்கிவிட்டேன்.
எனக்கு இயற்கை விவசாயத்தில் ஆர்வம்  அதிகம்.நெல்லி போடணும்னு முழவு எடுத்ததும் என்னோட ரெண்டு ஏக்கர் நிலத்தை இயற்கை விவசாயத்துக்குத் தயார்படுத்தினேன். ஒரு வருடத்துக்கு எந்த விவசாயமும் பண்ணாமல், தழைச்சத்துக்காக சணப்பு விதைத்து, மடக்கி உழுது போட்டேன்.நன்றாக பக்குவப்பட்டதும், சோதனை அடிப்படையில் இயற்கை முறையில் ரெண்டு ஏக்காலேயும் பெருநெல்லியை நட்டு, ஊடுபயிரா சப்போட்டாவையும் சாகுபடி செய்தேன்.நல்ல மகசூல் கிடைக்கவே.ஐம்பது ஏக்கரில் பெருநெல்லி போட்டுட்டேன். இன்னும் ஒரு சில மாதத்தில் அறுவடைக்குத் தயாராகிவிடும்”.
சாகுபடி முறை
நெல்லி சாகுபடிக்கு செம்மண் நிலம் ஏற்றது. அதிலும் மூன்று அடிக்கு கீழ் குறுஞ்சரல்கள் உள்ள மண்ணாக இருந்தால், மிகவும் நல்லது. கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை மே மாதமும், மற்ற மாவட்டங்களில் ஜுன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களிலும் நடவு செய்யலாம்.நெல்லியை இயல்பான நடவு முறை, அடர் நடவு முறை என இரண்டு முறைகளில் நடவு செய்யலாம்.இயல்பான நடவு முறையில் செடிக்குச் செடி மற்றும் வரிசைக்கு வரிசை 18 அடி இடைவெளி இருப்பதுபோல நடவேண்டும்.இப்படி நடும்போது ஏக்கருக்கு 130 செடிகள் வரை நடலாம். அடர் நடவு முறையில் மரத்துக்கு மரம் மற்றும் வரிசைக்கு வரிசை பத்து அடி இடைவெளியே போதும்.இதில் ஏக்கருக்கு 430 மரங்கள் வரை நடலாம்.இயல்பு நடவு முறையில் நடவு செய்யும்போது இடைவெளி அதிகமாக இருப்பதால், ஊடுபயிர் சாகுபடி செய்யலாம்.
நெல்லியில் மூன்றாவது ஆண்டில் இருந்துதான் வருமானம் என்பதால்,முதல் இரண்டு ஆண்டுகளுக்கான பராமரிப்புச் செலவை ஈடுகட்ட, பயறு வகைகளைப் பயிர் செய்யலாம்.இதன் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து வருமானம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.பயறு வகைகளை அறுவடை செய்ததும் அதன் செடிகளையே நெல்லிக்கு மூடாக்காகப் போட்டு விடலாம்.மரவள்ளி, வாழை, சப்போட்டா எனவும் நடவு செய்து பராமரிப்புச் செலவுகளை ஈடுசெய்யலாம்.
‘நெல்லி சாகுபடிக்கு அதிக தண்ணீர் உள்ள நிலம் சரிப்பட்டு வராது, மூன்றடி ஆழம் மற்றும் மூன்றடி அகலத்துக்கு குழி எடுத்து,காய்ந்த இலை,சருகளைப் போட்டு அதன் மேல் மண்ணைப் போட்டு மூடவேண்டும்.அதற்கு மேல் பத்து கிலோ அளவு தொழுவுரத்தைக் கொட்டி,தோண்டி வைத்திருக்கும் மேல் மண்ணை போட்டு மூடிய பிறகு, நெல்லிச் செடியை நடவு செய்ய வேண்டும்.செடியைச் சுற்றி வட்டப்பாத்தி அமைத்து ஒரு கிலோ மண்புழு உரம் போடவேண்டும்.நடவு செய்த முதல் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.தொடர்ந்து முதல் ஆறு மாதங்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாசனம் செய்யவேண்டும்.ஆறு மாதங்களுக்குப் பிறகு, செடிக்கு வாட்டம் இல்லாமல் அவ்வப்போது தண்ணீர் பாய்ச்சினாலே போதும்.
பெருநெல்லியைப் பொறுத்தவரை ஒவ்வொரு ரகமும் ஒவ்வொரு சமயத்தில் காய்ப்புக்கு வரும். அதற்கு ஏற்ற மாதிரி, காஞ்சன், கிருஷ்ணா, சக்கையா, என்.ஏ-7 என பல்வேறு ரகங்களையும் கலந்து நட்டால், ஆண்டு முழுவதும் வருமானம் பார்க்கலாம்.நெல்லியை நடவு செய்த நான்கு மாதங்களிலேயே பூ பூக்க ஆரம்பித்து விடும்.அவற்றை உதிர்த்து விடவேண்டும்.மூன்று வருடங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டும். அதன் பிறகு காய்ப்புக்கு அனுமதித்தால் நெல்லி ருசியாக இருப்பதுடன் மகசூலும் கூடும். நெல்லியின் ஆயுள் காலம் நாற்பது ஆண்டுகள்.ஆனால், ஒவ்வொரு பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை காய்ப்புத் திறன் குறையும்.அந்த நேரத்தில் மரத்தின் பக்க கிளைகளை வெட்டி விட வேண்டும். மீண்டும் விரல் தடிமனுக்கு கிளை வந்ததும் காய்க்க ஆரம்பித்து விடும்.
ஒரு ஏக்கரில் பெருநெல்லியும், ஊடுபயிராக சப்போட்டாவும் சாகுபடி செய்ய மணியன்  சொல்லும் செலவு -வரவு கணக்கு
விவரம்
செலவு
வரவு
குழியெடுத்தல் 20 ரூபாய்  X 130 செடி
2,600
நாற்று
2,600
நடவு
2,000
நீர் பாய்ச்சுதல்
1,000
தொழுவுரம்
1,200
போக்குவரத்து
2,000
அறுவடை
2,500
சப்போட்டா குழி, நடவு
2,500
மகசூல்: நெல்லி 4 டன்  X கிலோ 20
80,000
சப்போட்டா
500 கிலோ X  கிலோ 30
15,000
மொத்தம்
16,400
95,000
நிகர லாபம்
78,600
குழியெடுத்தல், செடி, நடவுச்செலவு ஒரு முறை மட்டுமே. அடுத்தடுத்த ஆண்டுகளில் அவையும் வருமானத்தில் சேர்ந்து விடும். இவர் சப்போட்டா கன்றை அரசுத் தோட்டக்கலைத் துறையில் இருந்து இலவசமாக பெற்றுள்ளதால், அதற்கான செலவும் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை (மேற்படி கணக்கு மணியன் சாகுபடி செய்யும் முறைகளை வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. இதை ஒப்பீட்டுக் கணக்காக மட்டுமே எடுத்துக் கொள்ளவும்).
நெல்லியை நடவு செய்த முதல் மூன்று ஆண்டுகளுக்கு மண்புழு உரம், கம்போஸ்ட் உரக்கலவையை மரத்துக்கு இரண்டு கிலோ வீதம், ஆறு மாதத்துக்கு ஒரு முறை வைக்க வேண்டும். நான்காவது ஆண்டில் மண்புழு உரம், கம்போஸ்ட் கலவையை மூன்று கிலோ வரை அடிப்பகுதியில்  இருந்து ஒன்றரை அடி தள்ளி குழியெடுத்து  அதில் போட்டு, மேல் மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டும். மண்புழு உரத்தில் உள்ள பதினாறு வகை நுண்ணுயிரிகள் வெயில்பட்டு செயல்படாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால், மண் போட்டு மூடி விடுவதால் நுண்ணுயிர்களின் செயல்பாடு முழுமையாகக் கிடைக்கும். முதல் நான்கு ஆண்டுகளுக்கு இதேபோல் உரங்களைக் கொடுத்தாலே மண் வளமாகிவிடும். பிறகு எந்த உரமும் தேவைப்படாது. தோட்டத்தில் உள்ள புல், களைச் செடிகளைக் களைத்து செடிகளைச் சுற்றி மூடாக்கு போட்டுக் கொள்ளலாம். இதைத் தவிர வேறு எந்தப் பக்குவமும் தேவையில்லை.
நெல்லியைப் பொறுத்தவரை சாறுண்ணி, தண்டுத் துளைப்பான் தாக்குதல் அதிகமாக இருக்கும். சாறுண்ணிகள் இலையில் உள்ள பச்சயத்தைச் சுரண்டி விடுவதால், இலைகள் வெளிறிப் போய்விடும். தண்டுத் துளைப்பான், தண்டுக்குள் சென்று தங்கி விடுவதால் மகசூலும் குறைந்து விடும். பஞ்சகவ்யா அடிப்பதன் மூலம் சாறுண்ணிகளையும், தண்டுத் துளைப்பானையும் கட்டுப்படுத்தலாம். சாதாரணமாகவே தண்டுத் துளைப்பான்களை அடையாளம் கண்டுவிட முடியும். மரங்களில் இருக்கும் இவற்றை சிறிய குச்சியை வைத்துக் குத்தி, வெளியே எடுத்து விட வேண்டும். பொதுவாக,  பிப்ரவரி முதல் மே ஜுலை முதல் செப்டம்பா என ஆண்டுக்கு இரண்டு முறை அறுவடை செய்யலாம். பல்வேறு ரகங்களையும் கலந்து நட்டிருந்தால், ஆண்டு முழுவதும் அறுவடை இருக்கும். ஓராண்டுக்கு ஒரு ஏக்கரில் இருந்து சராசரியாக நான்கு டன் முதல் 5 டன் வரை மகசூல் கிடைக்கும். இயற்கை முறை விளைபொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் குறைந்த பட்சம் கிலோவுக்கு 20 ரூபாயும், அதிகபட்சமாக 40 ரூபாயும் கிடைக்கும்.
சப்போட்டாவுக்கு தனியாக எந்தப் பராமரிப்பும் தேவைப்படாது. நான்கு நெல்லிக்கு மத்தியில் ஒரு சப்போட்டா என்ற கணக்கில் நெல்லியைப் போலவே குழி எடுத்து நடவேண்டும்.
“நெல்லிக்கு ஊடுபயிரா சப்போட்டாவை நட்டு வைத்தது தவிர தனியாக எந்தப் பராமரிப்பும் செய்யவில்லை. உரமும் கொடுக்கிறதில்லை. நெல்லிக்கு மட்டும்தான் உரம். ஆனாலும் சப்போட்டா நல்ல மகசூல் கொடுத்து காண்டு இருக்கிறது. சாதாரணமாக சப்போட்டாவை கிலோ 5 ரூபாய்னு வெளிவியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். இயற்கை விளைபொருட்களை விற்பனை செய்கிற கடைகளில் கிலோவுக்கு 25 முதல் 30 ரூபாய் வரைக்கும் கிடைக்கிறது.
தொடர்புக்கு
மணியன்,
தெரிசனங்கோப்பு
அலைபேசி: 94431-27132